JIPMER பல்கலைக்கழகத்தில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு..!
தற்போது ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (JIPMER பல்கலைக்கழகம்) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் Data Entry Operator (DEO) பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நாளை (15.06.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே தரப்பட்டுள்ளது.
JIPMER வேலைவாய்ப்பு விவரங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பில், ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் Data Entry Operator (DEO) பணிக்கு என 01 பணியிடம் காலியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. Data Entry Operator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கணினியில் ஒரு மணி நேரத்திற்கு 8000 வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் உடையவராகவும், ஆங்கில மொழியில் நன்கு பேச மற்றும் எழுத தெரிந்தவராகவும் இருப்பது அவசியமானது ஆகும். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் MS Office மற்றும் தட்டச்சு (Lower / Higher) செய்ய தெரிந்தவராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.
TN Job “FB Group” Join Now
Data Entry Operator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட Health / Hospital துறைகளில் குறைந்தது 3 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கட்டாயமானது ஆகும். DEO பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 28 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாதம் தோறும் ரூ.17,000/- ஊதிய தொகை பெறுவார்கள். இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
SBI வங்கியில் ரூ.37,000/- ஊதியத்தில் நிரந்தர பணிவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !
இந்த JIPMER பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் தேவையான ஆவணங்களையும் சேர்த்து அறிவிப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். நாளை (15.06.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.