தினசரி 3GB டேட்டா வழங்கும் ஜியோவின் ரீசார்ஜ் திட்டங்கள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
ஜியோ நிறுவனம் 349 மற்றும் 401 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 3GB டேட்டாவை வழங்குகிறது. இத்திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
ஜியோ:
ஜியோ நிறுவனம் குறைந்த காலத்தில் அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. அவ்வப்போது தங்கள் வாடிக்கையாளருக்கு புதிய ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த மாதங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கின் போது வீட்டிலிருந்து பணிபுரியும் ஜியோ பயனாளர்களுக்கு அந்நிறுவனம் குறைந்த விலையில் இன்டர்நெட் பயன்படுத்தும் வசதியை வழங்கியது. வீட்டிலிருந்து கம்ப்யூட்டர் மூலம் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் தங்கள் மொபைல் இன்டர்நெட்டையே பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு ஜியோ அதிக டேட்டாக்களை வழங்கியது.
செப்டம்பர் 6 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – கூடுதல் செயல்பாடுகளுக்கு அனுமதி!
அதனை தொடர்ந்து தற்போது நாள் ஒன்றுக்கு 3 GB வழங்கும் புதிய ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ப்ரீபெய்ட் ஜியோ சிம் பயனாளர்களுக்கு இத்திட்டம் உதவும். ரூபாய் 349 ரீசார்ஜ் திட்டம் 84GB டேட்டாவை வழங்குகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 3GB கிடைக்கிறது. அனைத்து நெட்ஒர்க்களுக்கும் இலவச அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களை இலவசமாக அளிக்கிறது. மேலும் லைவ் டிவி, மியூசிக் ஸ்ட்ரீமிங் போன்ற சலுகைகளும் உண்டு.
TN Job “FB Group” Join Now
அதே போல ஜியோ 401 ரீசார்ஜ் பிளான் 3GB டேட்டா, 100 எஸ்.எம்.எஸ், அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் VIP போன்ற சலுகைகளை 28 நாட்களுக்கு வழங்குகிறது. மேலும் ஜியோவின் 999 ரீசார்ஜ் பிளான் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது 399 ரூபாய் ரீசார்ஜ் பிளான் போலவே சலுகைகளை வழங்குகிறது. ரூபாய் 3499 ரூபாய் திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும். இதில் 3GB டேட்டா மற்றும் மற்ற திட்டங்களில் வழங்கப்படும் அதே வசதிகள் அளிக்கப்படுகிறது.