ஜார்காண்ட் மாநிலத்தில் விதவை பெண்களுக்கு ரூ.2 லட்சம் வழங்க இருப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உதவித்தொகை
இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் பெண்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறது. அது தவிர பல்வேறு மாநில அரசுகள் விதவை பெண்கள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அது மட்டுமில்லாமல் அவர்கள் மறுதிருமணம் செய்து கொள்ள வேண்டும் என அரசு ரொக்க பரிசும் வழங்கி வருகிறது.
தமிழக அரசில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் || முழு விவரங்களுடன்!
அந்த வரிசையில் ஜார்கண்ட் அரசு தற்போது விதவை அருமையாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது மறுமணம் செய்து கொள்ளும் விதவைகளுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. விதவைகள் கண்ணியத்துடன் வாழ இந்த திட்டம் உதவும் என்பதால், இதனை அமல்படுத்தி இருப்பதாக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.