தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி – மே 12ம் தேதிக்குள் மேல் முறையீடு!
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தள்ளுபடி பெறுபவர்களுக்கான பெயர் பட்டியல் வெளியானது. இதில் இடம் பெறாதவர்கள் மேல் முறையீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல்முறையீடு:
தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக கட்சியினர் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்தனர். அதாவது ஆவின் பால் விலை குறைப்பு, மகளிருக்கான இலவச பேருந்து, நகைக்கடன் தள்ளுபடி, அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல் போன்றவர்கள் முக்கிய வாக்குறுதிகளாக கருதப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தாக முக்கிய 5 வாக்குறுதிகளை திட்டமாக செயல்படுத்தினார்.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து பிற திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நிலவியது. ஏனெனில் நிபந்தனைகள் அடிப்படையில் தகுதி பெற்றவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு தெரிவித்தது. இதன் அடிப்படையில் தகுதியானோர் பட்டியல் தயார் செய்யப்பட்டது. இதில் நகைக்கடன் பெற்ற ஏராளமானோர் இடம் பெறவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த இவர்கள் எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுத்தனர்.
தமிழக அரசில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!
இந்த நிலையில் நகைக்கடன் பெயர் பட்டியலில் தகுதி இருந்தும் இடம் பெறாதோர் அதற்கான மேல்முறையீட்டு மனுக்களை மே 12ம் தேதிக்குள் அளிக்கலாம் என்று நாமக்கல் மாவட்ட இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார். மேலும் அம்மாவட்டத்தின் திருச்செங்கோடு சரக துணைப்பதிவாளரிடம், எழுத்துப்பூர்வமாக தகுந்த ஆதாரத்துடன் மே 12ம் தேதிக்குள் மேல்முறையீடு செய்யலாம். அதன் பின்னர் வரப்படும் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்.