சென்னையில் இன்று அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!
ஆபரணத் தங்கத்தின் விலை, ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் காரணமாக அனைத்து இடங்களிலும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இருப்பினும் தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு வாரமாக குறைந்து வருகிறது. இந்த வகையில் இன்றும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தடாலடியாக குறைந்து உள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு:
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக பொதுமக்கள் அதிகம் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தனர். இதனால் மக்கள் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். சேமிப்பு திட்டங்களை தொடர்ந்து அதிகமாக ஆபரண தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிட வேண்டியவை. இந்த முதலீடுகள் பெண் குழந்தைகளின் எதிர்கால தேவைகளுக்கு பெரு உதவியாக இருக்கும். மேலும் தங்கத்தில் முதலீடு செய்தால் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை மதிப்பு உயர்த்து கொண்டுதான் இருக்கும். இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட நம் தமிழகத்தில் தான் நகைப்பிரியர்கள் அதிகம் உள்ளனர்.
தமிழகத்தில் சுப முகூர்த்த நாட்களில் தங்கத்தின் விலை அதிரடியாக உயரும். தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இருப்பினும் நகை விற்பனையில் எந்த சரிவும் இல்லை , நகைப்பிரியர்கள் நகையை வாங்கிக் கொண்டுதான் இருப்பார்கள். உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக சர்வதேச அளவில் நாணயத்தின் மதிப்பு சரிவு, பொருளாதார நெருக்கடி அனைத்து நாடுகளிலும் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் பெற்றோர் கவனத்திற்கு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
இந்த நிலையில் தமிழகத்தில் இந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை அதிக சரிவை சந்தித்து உள்ளது. அதனால் மக்கள் தங்க நகைகளை வாங்கி வருகின்றனர். இந்நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து, ரூ.38,344-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 குறைந்து ஒரு கிராம் ரூ.4,793-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.72.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகை வாங்குவதில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.