நாளை முதல் JEE நுழைவுத்தேர்வு துவக்கம் – 9 லட்சம் பேர் பங்கேற்பு!!
பொறியியல் படிப்புகளுக்கான JEE நுழைவுத்தேர்வு நாளை (ஜனவரி 24) முதல் துவங்க இருக்கிறது. இந்த தேர்வை நாடு முழுவதும் இருந்து 9 லட்சம் பேர் எழுத இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நுழைவுத்தேர்வு துவக்கம்
நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பு பயில விரும்புபவர்கள் தேசிய தேர்வு முகமை நடத்தும் (NTA) JEE நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் ஆகும். இந்த தேர்வு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை நடத்தப்படுகிறது. அந்த வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான ஜே.இ.இ மெயின் நுழைவுத் தேர்வு நாளை (ஜனவரி 24) நடைபெற இருக்கிறது. இத்தேர்வுகள் ஜனவரி 31 ஆம் தேதி வரை தேர்வு நடத்தப்பட உள்ளது.
அரசுப்பள்ளி ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!!
Follow our Instagram for more Latest Updates
இந்த தேர்வை, 12 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களும் எழுத முடியும். அந்த அடிப்படையில், ஜனவரி மாதத்திற்கான ஜே.இ.இ மெயின் நுழைவுத் தேர்வை நாடு முழுவதும் இருந்து சுமார் 9 லட்சம் பேர் எழுத இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்கள் IIT, NIT போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பொறியியல் படிப்புகளை பெறலாம்.