ஜேஇஇ நான்காம் கட்ட நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு!
நாடு முழுவதும் உள்ள மத்திய பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வழங்க நடத்தப்படும் ஜேஇஇ 4ஆம் கட்ட தேர்வு ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் நடைபெற இருந்த நிலையில் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜேஇஇ தேர்வுகள்:
தேசிய தேர்வுகள் முகமை சார்பில் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளுக்காக ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு தேர்வுகள் 4 கட்டமாக நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 கட்ட தேர்வுகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடந்து முடிந்த நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த 3ஆம் கட்ட தேர்வு கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
முத்துராசை கொன்றதாக ஒத்துக்கொள்ளும் நாச்சியார் – பல திருப்பங்களுடன் “நாம் இருவர், நமக்கு இருவர்”!
மேலும் தேர்வுக்கு 15 நாட்கள் முன்பாக தேதிகள் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஜேஇஇ மூன்றாம் கட்ட தேர்வு ஜூலை 20 முதல் 25 வரை நடத்தப்படும். 4ம் கட்ட தேர்வு ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்றாம் மற்றும் நான்காம் கட்ட தேர்வுகளுக்கு 2 நாட்கள் மட்டுமே இடைவெளி இருப்பதால் 4ம் கட்ட தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் ஜேஇஇ நான்காம் கட்ட தேர்வுகள் குறித்து மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேர்வுகளை ஒத்திவைக்க கோரி மாணவர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை வைக்கப்பட்டதை தொடர்ந்து அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு நான்காம் கட்ட தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் நான்காம் கட்ட தேர்வுக்கு 4 வாரங்கள் இடைவெளி வழங்க அறிவுறுத்தப்பட்டது. இதன்படி, 4ஆம் கட்ட நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 26, 27, 31 மற்றும் செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மேலும் இதற்கான விண்ணப்ப பதிவு ஜூலை 20 வரை நீட்டிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நான்காம் கட்ட தேர்வுக்கு 32 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.