முத்துராசை கொன்றதாக ஒத்துக்கொள்ளும் நாச்சியார் – பல திருப்பங்களுடன் “நாம் இருவர், நமக்கு இருவர்”!

0
முத்துராசை கொன்றதாக ஒத்துக்கொள்ளும் நாச்சியார் - பல திருப்பங்களுடன்
முத்துராசை கொன்றதாக ஒத்துக்கொள்ளும் நாச்சியார் - பல திருப்பங்களுடன் "நாம் இருவர், நமக்கு இருவர்"!
முத்துராசை கொன்றதாக ஒத்துக்கொள்ளும் நாச்சியார் – பல திருப்பங்களுடன் “நாம் இருவர், நமக்கு இருவர்”!

விஜய் தொலைக்காட்சியில் பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியலில் இன்று நாச்சியார் டிஎஸ்பி கார்த்திக்கிடம் தான் முத்துராசுவை கொன்றதாக வாக்குமூலம் கொடுக்கிறார். மாயனை காப்பற்றுவதற்காக தான் தற்போது தனது தவறை ஒத்துக்கொள்வதாக நாச்சியார் அவரிடம் கூறுகிறார்.

“நாம் இருவர், நமக்கு இருவர்”

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியலில் இன்று டிஎஸ்பி கார்த்திக்கிடம் நாச்சியார் சென்று தான் தான் தனது மகளின் நல்வாழ்விற்காக முத்துராசுவை கொலை செய்ததாக கூறுகிறார். இதனை கேட்டு எரிச்சல் அடையும் கார்த்திக் குடும்பத்தில் அனைவரும் மாற்றி மாற்றி வந்து கொலையை தான் செய்ததாக சொன்னால் நாங்கள் யாரை தான் நம்புவது என்று கேட்கிறார். இதனை கேட்டு பதறும் நாச்சியார் கார்த்திக்கிற்கு புரிய வைக்க முயற்சிக்கிறார்.

TCS, Infosys, Wipro நிறுவனங்களில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!

இருந்தும், கார்த்திக் நம்ப மறுக்கிறார். யார் குற்றவாளி என்று கண்டுபிடிப்பது போலீஸ் வேலை என்றும் தான் அதனை பார்த்து கொள்வதாகவும் கூறி விடுகிறார். பின் நாச்சியார் கார்த்திகை சென்று பார்த்ததை பற்றி அறியும் மாயன் அவரை வந்து திட்டுகிறார். அதற்கு நாச்சியார் இதனை நாட்கள் தான் மாயனின் அருமை புரியாமல் இருந்ததாகவும், தற்போது தான் தெரிந்து கொண்டதாகவும், அதனால் கார்த்திக்கிடம் உண்மையை ஒப்புக்கொண்டு விட்டதாக கூறுகிறார்.

TN Job “FB  Group” Join Now

இதனை கேட்டு அதிர்ச்சி அடையும் மாயன் அவரை காப்பாற்றுவது தனது கடமை என்று கூறுகிறார். இத்தனை நாட்கள் தனக்கு கிடைக்காத தாய் பாசம் கிடைத்து விட்டதாகவும் மகிழ்கிறார். பின், மஹாவிடம் சென்று மாயன் பேசுகிறார். ஆனால், மாயன் மேல் மிகவும் அதிகமான கோபத்தில் இருக்கும் மஹா அவரை சரமாரியாக திட்டி விடுகிறார். தனது குடும்பம் மட்டுமே முக்கியம் என்று வாழும் மாயன் தனக்கும் தந்து குழந்தைக்கும் தேவையில்லை என்றும் கூறுகிறார்.

இதனால் மாயன் மனம் உடைந்து போகிறார். பின், ஐஸ்வர்யா கவலையாக இருப்பதாகவும், அதனால் அவளை வெளியே அழைத்து செல்லுமாறு சரண்யாவிடம் நாச்சியார் கூறுகிறார். இவர்கள் கிளம்பி போகும் போது ஐஸ்வர்யாவின் மாமியார் வந்து அவரை திட்டி அடித்து விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிந்து விடுகிறது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!