ஜன்தன் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – ரூ.1000 பெறலாம்! விவரங்கள் இதோ!
இந்தியாவில் 47 கோடிக்கும் அதிகமான மக்கள் பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா கணக்கு வைத்துள்ளனர். இதன் கீழ் மக்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஜன் தன் யோஜனா கணக்குதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படவுள்ளதாக தகவல் வந்துள்ளது .
ஜன்தன் கணக்கு:
இந்தியாவில் அனைவருக்கும் வங்கி கணக்கு இருக்க வேண்டும் என்ற நோக்கிலும் அதன் மூலம் மக்கள் வங்கி சார்ந்த அனைத்து சேவைகளையும் பெற வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு பிரதமர் மோடி அவர்கள் ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டு வந்தார். இத்திட்டம் கடந்த 2014ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டில் மட்டும் 17.90 கோடி பேர் வங்கி கணக்கை திறந்தனர்.
Follow our Instagram for more Latest Updates
இது ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் என்பதால் நீங்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகையை வைத்திருக்க வேண்டியது அவசியமில்லை. இந்தியாவில் 10 வயதுக்கு மேற்பட்ட எந்த ஒரு நபரும் ஜன்தன் கணக்கை தொடங்கலாம். இந்த ஜன்தன் திட்ட பயனாளிகளுக்கு ஓவர் டிராப்ட் என்ற வசதியும் கிடைக்கும். இதன் கீழ் ரூ.10,000 வரை பணம் பெறலாம்.
தமிழக அரசின் ரூ.2 லட்சம் உதவித்தொகை.. விண்ணப்பங்கள் வரவேற்பு – மாவட்ட ஆட்சியர் அறிக்கை!
Exams Daily Mobile App Download
ஆரம்பத்தில் ஓவர் டிராப்ட் வரம்பு முன்பு ரூ.5,000 ஆக இருந்தது. தற்போது 10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் இனி ஜன்தன் கணக்குதாரர்கள் 10,000 வரை கடன் பெறலாம். இதற்கு ஒரு நிபந்தனை என்னவெனில் 10,000 கடன் பெற ஜன்தன் கணக்கு தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும். இதில் ரூ. 2,000 வரையிலான கடன்களுக்கு நிபந்தனைகள் இல்லை.