சென்னையில் நாளை மறுநாள் வேலைவாய்ப்பு முகாம் – 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு!!
தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில் ஜன. 20ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தற்போது வேலை வாய்ப்புகளை தேடி வருவோர் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழக மக்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்கும் வண்ணம் கடந்த 2022ம் ஆண்டு முதல் அரசும் தனியார் துறைகளும் ஏராளமான வேலைவாய்ப்புகளை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அத்துடன் தனியார் துறைகள் மாவட்டங்கள் தோறும் குறிப்பிட்ட பகுதிகளில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அந்த வகையில் ஜன. 20ம் தேதி சென்னையில் அரசு சார்பாக மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 3 வயதிற்குட்டபட்டவர்கள் 8, 10, 12, டிகிரி, டிப்ளமோ பட்டம் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமானது கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெறும்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு? முதலமைச்சர் ஆலோசனை!!
இதில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை நாடுநர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளனர். இந்த முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.