நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு? முதலமைச்சர் ஆலோசனை!!
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை இம்மாதத்தில் நடைபெற உள்ளது. அதனால் இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
நீட் தேர்வு:
நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்பிற்கு மாணவர் சேர்க்கைக்கையானது நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறுகிறது. இத்தேர்விற்கு தமிழகத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இது மட்டுமல்லாமல் நீட் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி தங்களின் உயிர்களை மாய்த்து கொள்ளும் அசம்பாவிதங்களும் நடைபெற்று வருகிறது. அதனால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பான மனு ஆளுநரிடமும், குடியரசு தலைவரிடமும் கொடுக்கப்பட்டுள்ளது.
‘தமிழ்நாடு’ பெயரை மாற்றுவதற்கான பரிந்துரையா?- ஆளுநர் R.N ரவி விளக்கம்!
அத்துடன் உச்ச நீதிமன்றத்தில், நீட் தேர்வு விலக்கு தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கு இம்மாதத்தில் விசாரணைக்கு வர உள்ளது. அதனால் தற்போது நீட் தேர்வு விலக்கு தொடர்பாக வழக்குகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், துரைமுருகன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.