அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அமலாகும் பழைய ஓய்வூதிய திட்டம்?
உத்தரபிரதேசத்தில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தல் பணிகள் நடந்து வரும் நிலையில், சமாஜ்வாடி கட்சியினர் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக உறுதி அளித்துள்ளார்.
பழைய ஓய்வூதியம்:
உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை மாவட்ட வாரியாக 7 கட்டங்களாக நடக்க உள்ளது. அங்கு மாநிலம் முழுவதும் மொத்தம் 403 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து வரும் மார்ச் 10ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. தற்போது உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி ஆட்சி பொறுப்பில் உள்ளது.
TN Job “FB Group” Join Now
ஆனால் சமாஜ்வாடி மற்றும் பாஜக இரண்டு கட்சிகளுக்கும் இடையில் தான் அதிக போட்டி நிலவுகிறது. உத்தரபிரதேசத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய முறை தான் தற்போது அமலில் இருந்து வருகிறது. ஆனால் அரசு ஊழியர்கள் அனைவரும் பழைய ஓய்வூதியத்தை அமலாக்க பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால் சமாஜ்வாடியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
குக் வித் கோமாளி’ ஷோவில் அம்முவின் கையை பிடித்த புகழை மிரட்டிய சக்தி – இதனால் தானா? ரசிகர்கள் ஷாக்!
ஆனால் புதிய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்த பாஜக அரசு அதை பற்றிய எந்த வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது குறித்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அகிலேஷ் யாதவின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதனால் மீண்டும் ஒரு முறை சமாஜ்வாடி கட்சிக்கு வாய்ப்பு அளிக்க இருப்பதாகவும் கூறினார். இதனால் அரசு ஊழியர்களின் வாக்குகளை பெறுவதற்காக அகிலேஷ் யாதவ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.