பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. விரைவில் துவங்கவுள்ள சூப்பர் திட்டம் – குவியும் வரவேற்பு!

0
பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. விரைவில் துவங்கவுள்ள சூப்பர் திட்டம் - குவியும் வரவேற்பு!
பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. விரைவில் துவங்கவுள்ள சூப்பர் திட்டம் - குவியும் வரவேற்பு!
பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. விரைவில் துவங்கவுள்ள சூப்பர் திட்டம் – குவியும் வரவேற்பு!

பள்ளிகளில் ‘நோ-பேக் டே’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை பீகார் அரசு எடுத்து வருகிறது. மாணவர்களின் சுமையை குறைக்க வாரத்திற்கு ஒரு முறை கட்டாய விளையாட்டு என்பதை அரசு கொண்டு வர உள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

‘நோ-பேக் டே’ திட்டம்:

பீகார் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சுமையை குறைக்க வாரத்திற்கு ஒரு முறை கட்டாய விளையாட்டு தினமாக அனுசரிக்கும் வகையில், ‘நோ-பேக் டே’ விதியை அறிமுகப்படுத்த அரசு முயற்சி வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று கல்வித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீபக் குமார் சிங் பிடிஐ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். வாரத்திற்கு ஒரு முறையாவது, மாணவர்கள் மதிய உணவை மட்டும் பள்ளிகளுக்கு எடுத்து வருவார்கள். அன்றைய தினம் புத்தகங்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. நடைமுறை மற்றும் அனுபவ கற்றலுக்கு அன்றைய தினம் ஒதுக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

இத்தகைய கொள்கையின் நோக்கம் மாணவர்களை பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதாகும், இது அவர்களின் கற்றலை ஊக்கப்படுத்தும். தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் மாணவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேலும், இந்த முயற்சி தேசிய கல்விக் கொள்கை 2020 க்கு ஏற்ப வடிவமைக்கப்ட்டுள்ளதாகவும், இது அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

அதிரடியாக சரிவை நோக்கி செல்லும் ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் உற்சாகம்!

Exams Daily Mobile App Download

இது குறித்து பேசியுள்ள பீஹார் மாநில கலை, கலாச்சாரம் மற்றும் இளைஞர் அமைச்சர் ஜிதேந்திர குமார் ராய் அவர்கள், எங்கள் துறை இது தொடர்பாக ஒரு திட்டத்தை தயாரித்து வருகிறது. நான் மாநில கல்வி அமைச்சரை சந்தித்து விரிவான திட்டத்தை சமர்ப்பிப்பேன். சமீபகாலமாக தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுகளில் பீஹார் மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் சிறப்பாக செயல்பட்டது பெருமைக்குரியது. பள்ளிகளில் இது போன்ற திட்டங்களை கொண்டு வருவதன் மூலம் திறமையானவர்களை ஆரம்ப நிலையிலேயே அடையாளம் காண முடியும். அதற்கேற்ப மாநில, தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு அரசு அவர்களை தயார்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!