ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – புதிய விதி அமல்! மத்திய அரசு அதிரடி!!
நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, தற்போது ரேஷன் கடைகளில் புதிய விதிமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
புதிய விதிமுறை
நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் கிடைக்க வேண்டும் என அனைத்து ரேஷன் கடையிலும் மலிவு விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் அட்டைதாரர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் உணவு பொருட்களை பெற்றுக் கொள்ளும் வகையில்,நாட்டில் ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பல லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் சாமானிய மக்களுக்கு அவர்களுக்குரிய ரேஷன் பொருட்கள் சென்றடைய வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் முதற்கட்ட நடவடிக்கையாக தற்போது ரேஷன் கடைகளில் புதிய விதிமுறை ஒன்றை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அதன்படி அனைத்து ரேஷன் கடைகளிலும் மின்னணு தராசுடன் மின்னணு பாயின்ட் ஆப் சேல் (இபிஓஎஸ்) கருவிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்த நாட்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!
அதன்படி மின்னணு பாயின்ட் ஆப் சேல் (இபிஓஎஸ்) கருவிகள் அனைத்து ரேஷன் கடைகளில் விரைவில் பொருத்தப்பட உள்ளது. இதன் மூலமாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் எந்தவித குறைபாடின்றி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் பொருட்கள் குறைவில்லாமல் சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.