தமிழகத்தில் இந்த நாட்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!
சென்னை வானிலை ஆய்வு மையம் தினதோறும் தமிழகத்தின் காலநிலை குறித்த தகவல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்:
தமிழகத்தில் ஜன. 19, 20, 21 ஆகிய தினங்களில் வறண்ட வானிலை நிலவ கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates
மேலும் நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்ல ஜன. 22, 23ம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஓட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
IBPS SO Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!!
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும். மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஓட்டிய குமரி கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.