மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – விரைவில் சம்பள உயர்வு!
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்திலும் மாற்றம் இருக்க வேண்டும் என்ற வகையில் புதிய சம்பள ஃபார்முலா ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளது. அதன்படி 8வது ஊதியக்குழு வந்த பிறகு புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
சம்பள கணக்கீடு:
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த வருடம் அகவிலைப்படி 2 கட்டங்களாக உயர்த்தப்பட்டு 31% ஆக வழங்கப்பட்டு வந்தது. மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கியது. இந்த நிலையில் மத்திய அரசு மீண்டும் 3% அகவிலைப்படி தற்போது 34% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2022 ஜனவரி 1ம் தேதி முதல் தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
அதே போல அரசு 18 மாத காலமாக நிலுவையில் வைத்துள்ள அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலுவைத்தொகை வழங்கப்பட்டால் ஒரு ஊழியருக்கு 2 லட்சம் வரை தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஊதிய உயர்வு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிகரிக்கும் விலைவாசி, பணவீக்கம் இவற்றை பொறுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடந்தோறும் ஊதிய உயர்வு அளிக்கப்படும். தற்போது அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடிப்படை சம்பளத்திலும் மாற்றம் இருக்க வேண்டும் என்ற வகையில் புதிய சம்பள பார்முலா ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பார்முலா 2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமலுக்கு வர வாய்ப்பு உள்ளது. தற்போது 7வது ஊதியக்குழுவின் அடிப்படையில் தான் ஊழியர்களுக்கு சம்பள கணக்கீடு நடைமுறையில் உள்ளது. அதனால் புதிய சம்பள பார்முலா 8 ஆவது ஊதியக்குழு வந்த பிறகு 2026 ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.