தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் கவனத்திற்கு – சூப்பர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் கவனத்திற்கு - சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் கவனத்திற்கு - சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் கவனத்திற்கு – சூப்பர் அறிவிப்பு!

தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெற்று கொண்டிருக்கிறது. இதையடுத்து பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி விரைவில் நடைபெற உள்ளது. இதில் ஆசிரியர்கள் மன உளைச்சலின்றி விடைத்தாள்களை திருத்த சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் கவனத்திற்கு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை தொடர்ந்து இந்த ஆண்டு கட்டாயமான முறையில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி தற்போது 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் 12ம் வகுப்பு மாணவர்களில் சில பாடப்பிரிவை சேர்ந்தவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவடைந்துள்ளது. இதையடுத்து மற்ற மாணவர்களுக்கு வருகிற 28ம் தேதி அன்று தேர்வு முடிவடைய உள்ளது.

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 31ம் தேதியும் அத்துடன் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 30ம் தேதியும் தேர்வுகள் முடிவடைய உள்ளது. இந்த ஆண்டு விரைவில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது தேர்வுகள் முடிவடைவதற்குள் பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் எப்போது தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் வருகிற 2 முதல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ITBP எல்லைக் காவல் அமைப்பில் Head Constable பணி – 240+ பணியிடம் || 10 வது தேர்ச்சி போதும்..!

இதே போல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற ஜூன் 1ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க உள்ளது. அடுத்ததாக 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 10 முதல் 17ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆசிரியர்கள் விடைத்தாள்களை எந்தவித இடையூறுமின்றி விடைத்தாளை திருத்தும் வகையில் பல்வேறு சலுகைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வழங்கி வருகிறது. இதில் குறிப்பாக ஆசிரியர்கள் அவர்கள் இருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள மையத்திற்கு சென்று விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!