அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு ஜாக்பாட் – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
ஆப்கானிஸ்தான் நாட்டில் நடைபெற்று வரும் தாலிபான்கள் ஆட்சியில் அரசு ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் விரைவில் நல்ல சம்பளத்துடன் கூடிய அரசு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு வேலைவாய்ப்பு:
தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் தாலிபான்கள் ஆட்சி நடைபெற்றது. இந்த ஆட்சியை விரும்பாத அந்நாட்டு மக்கள் அமெரிக்காவிடம் உதவி கோரினர். அதன் அடிப்படையில் அமெரிக்க நாட்டு இராணுவம் கடந்த 20 ஆண்டுகளாக பாதுகாப்பு வழங்கி வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க இராணுவம் சில நிர்வாக காரணங்களுக்காக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது. அதனால் மீண்டும் தாலிபான்கள் ஆட்சி தற்போது தொடர்ந்துள்ளது.
அந்த வகையில் தாலிபான்கள் அமைப்பின் மூத்த தலைவர் முல்லா அகுந்த் தலைமையில் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி முதல் தற்காலிக ஆட்சி நடைபெற்று வருகிறது. இத்தகைய தாலிபான்கள் ஆட்சிக்கு பயந்து பல இளம் அரசு ஊழியர்கள் வேறு நாடுகளுக்கு சென்றுவிட்டனர். அதனால் ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசு ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறாக புதிய ஆட்சி தொடங்கி 5 மாதங்களே ஆன நிலையில் இத்தகைய அரசு ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தாலிபான் ஆட்சியில் பணிபுரிந்து வரும் அரசு அதிகாரிகளுக்கு தொழில்முறை திறன்கள் இல்லை என்று உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஜனவரி 30 வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை – அரசு அதிரடி அறிவிப்பு!
மேலும் இதன் காரணமாக திறன் வாய்ந்த ஊழியர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தாலிபான்கள் மூத்த தலைவர் ஆப்கானிஸ்தான் நாட்டை பலவீனமாக்க திறன் வாய்ந்த மற்றும் நன்கு படித்த நபர்களை வேண்டுமென்றே சர்வதேச நாடுகள் மீட்கின்றோம் என்ற பெயரில் பறித்து விட்டனர் என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறியுள்ளார். இதனால் விரைவில் நல்ல சம்பளத்துடன் அரசு வேலைக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.