TCS நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 8% வரை சம்பள உயர்வு!
முன்னணி IT நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தனது ஊழியர்களுக்கு 5% முதல் 8% வரைக்கும் ஊதியத்தை உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சம்பள உயர்வு
உலகளவில் கொரோனா பேரலைத்தொற்று காலத்திலும் ஆக்டிவாக இருந்த ஒரேயொரு துறை என்றால் அது தொழில்நுட்ப (IT) நிறுவனங்கள் தான். ஆனால், கொரோனா காலத்திற்கு பின்பாகவும் இந்த துறையில் வேலைவாய்ப்புகளும், அட்ரிஷன் விகிதங்களும், சம்பள உயர்வும் எக்கச்சக்கமாக அதிகரித்தது. இதில் குறிப்பாக இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களை எடுத்துக்கொண்டால் கொரோனாவுக்கு பிந்தைய கால கட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய பணியமர்த்தல் எண்ணிக்கை ஆயிரங்களாக அதிகரித்தது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் கடந்த 2 நிதியாண்டுகளாக TCS, இன்போசிஸ், HCL உள்ளிட்ட முன்னணி IT நிறுவனங்கள் கிட்டத்தட்ட 1 லட்சத்துக்கும் அதிகமான பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது. இந்த நடவடிக்கை இன்னும் தொடரும் என்று இந்நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இந்த நிலையில் TCS நிறுவன ஊழியர்களுக்கு
5% முதல் 8% வரை சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக TCSன் முதன்மை நிர்வாக அதிகாரிகள் கணிசமான அளவு சம்பள உயர்வை பெற்றிருந்தனர்.
தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் தள்ளிவைப்பு? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
இது குறித்து இந்நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி மிலிண்ட் லக்காட் கூறுகையில், ‘TCS நிறுவன ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு 5% முதல் 8% வரை இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இந்நிறுவனம் கடந்த காலாண்டில் 14000க்கு மேற்பட்ட புதிய ஊழியர்களை புதிதாக பணியமர்த்தியுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 6,06,331ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.