தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – மீண்டும் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்!
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு நாளை முதல் மீண்டும் வழங்கப்படும். தமிழக அரசு ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறையை ரத்து செய்து இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விடுமுறை ரத்து:
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரகளுக்கும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி தமிழகத்தில் சுமார் 2.15 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கு வீடு வீடாக டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தது.
இதற்கிடையில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் கடைகள் இயங்காது என்றும், அன்றைய தினம் பொங்கல் தொகுப்பு பெற உள்ளவர்கள் அடுத்தடுத்த நாட்களில் பொங்கல் தொகுப்பு பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதுவரை ஜன.13ம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில் ஜன.14 முதல் 18ம் தேதி வரை பொங்கல் பண்டிகை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று பொங்கல் தொகுப்பு வழங்கப்படாத ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் விதமாக நாளை ஜன.17ம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறையை ரத்து செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனால் பொங்கல் தொகுப்பு வாங்காத அனைவரும் நாளை ஜன.17ம் தேதி முதல் ஜன.31ம் தேதி வரை பொங்கல் தொகுப்பு பெற்றுக் கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுவரை 88% பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் 100% பேருக்கு பொங்கல் வழங்கப்படும் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்