தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு, 25% தீபாவளி போனஸ் – வெளியாகுமா?
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்கப்பட வேண்டும் என்று பலவேறு தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
தீபாவளி போனஸ்:
கடந்த 2020 ம் ஆண்டு முதல் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக பல தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை ஆட்குறைப்பு மற்றும் சம்பளக்குறைப்பு செய்து வந்தது. இதனால் மக்களின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தது. ஆனால் அரசு ஊழியர்கள் மட்டும் தான் தப்பியவர்கள். ஆயினும், அவர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி போன்றவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பதிப்புகளில் இருந்து மாநிலம் படிப்படியாக மீண்டு வருகிறது.
ஒரு வாரத்தில் 6 நாட்கள் வங்கிகள் விடுமுறை – RBI பட்டியல்! வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இந்நிலையில், தீபாவளி பண்டிகை வருவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை ஒட்டி போனஸ் வழங்கப்படுவது வழக்கம். நடப்பாண்டில் எத்தனை சதவீதம் போனஸ் கிடைக்கும் என்று அரசு ஊழியர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். இந்நிலையில், மின்வாரிய தலைவருக்கு தொழிற்சங்கத்தினர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளனர். அதில், நிரந்தர பணியாளர்களுக்கு 25 சதவீத போனஸ் என்றும், வகுப்பு 1 மற்றும் 2 அலுவலர்கள், பொறியாளர்களுக்கு தீபாவளி பரிசாக 5,000 ரூபாய், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒருமாத ஊதியம் போனஸாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
விஜய் டிவி நிகழ்ச்சியில் சேர்ந்து கலக்கும் பாரதி, கண்ணம்மா – ரசிகர்கள் உற்சாகம்!
இதேபோல், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அவர்களும் கடந்த இரண்டு ஆண்டுகாலமாக அரசு போக்குவரத்து கழகங்கள், பொதுத் துறை வாரியங்களான குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம், மின்சாரம், தேயிலை வாரியம், கதர் வாரியம், தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகம், சர்க்கரை ஆலை போன்றவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகை போனஸாக 25% கொடுக்க முன் வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான அரசின் முடிவு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.