மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – வீட்டு வாடகைப்படி உயர்வு!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - வீட்டு வாடகைப்படி உயர்வு!
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - வீட்டு வாடகைப்படி உயர்வு!
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – வீட்டு வாடகைப்படி உயர்வு!

ஆந்திர மாநிலத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு 11வது ஊதிய திருத்தக் குழு அளித்த பரிந்துரையின் படி ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து மாவட்ட தலைமையகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.

வீட்டு வாடகைப்படி

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டதால் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதனை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இதில் குறிப்பாக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அத்துடன் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வரவளிக்கப்பட்டதால் பல்வேறு மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு 11வது ஊதிய திருத்தக் குழு அளித்த பரிந்துரையின்படி ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ஆனால் இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் 11வது ஊதிய திருத்தக் குழு அளித்த பரிந்துரையின்படி வழங்க உள்ள ஊதிய உயர்வை ரத்து செய்து பழைய முறைப்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் இது குறித்து எந்தவொரு நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளவில்லை. அதனால் கடந்த 3ஆம் தேதி அரசு ஊழியர்கள் மாபெரும் பேரணியை நடத்தினர். இதில் பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்து கோரிக்கை நிறைவேறாவிட்டால் பிப்ரவரி 7ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்தனர்.

ஜீ தமிழ் “என்றென்றும் புன்னகை” சீரியலில் இருந்து விலகிய நடிகர் – ரசிகர்கள் அதிர்ச்சி!

அதனால் இது தொடர்பாக அரசு ஊழியர்கள் சங்கத்தினரிடம் அமைச்சர் தலைமையில் அடங்கிய குழு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அரசு ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் வீட்டு வாடகைப்படி மக்கள் தொகைக்கு ஏற்ப உயர்த்தி வழங்கப்படும் என்று மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி அனைத்து மாவட்ட தலைமையகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி 16% வழங்கப்படும். அத்துடன் மாநிலப் பிரிவினைக்குப் பிறகு ஹைதராபாத்தில் இருந்து இடம் பெயர்ந்த மாநில செயலகம் மற்றும் துறைத் தலைவர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி 24 சதவீதம் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதனை இந்த ஆண்டு ஜனவரி முதல் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!