ஐடி ஊழியர்களுக்கு 6 மாதத்தில் 2 முறை சம்பள உயர்வு – நிறுவனங்கள் அறிவிப்பு!!

0
ஐடி ஊழியர்களுக்கு 6 மாதத்தில் 2 முறை சம்பள உயர்வு - நிறுவனங்கள் அறிவிப்பு!!
ஐடி ஊழியர்களுக்கு 6 மாதத்தில் 2 முறை சம்பள உயர்வு - நிறுவனங்கள் அறிவிப்பு!!
ஐடி ஊழியர்களுக்கு 6 மாதத்தில் 2 முறை சம்பள உயர்வு – நிறுவனங்கள் அறிவிப்பு!!

பொதுவாக பெரு நிறுவனங்களை பொருத்தளவு, தொழில்நுட்ப நிறுவனத்தின் ஊழியர்கள் தான் அதிகளவு சம்பளத்தை பெற்று வருகின்றனர். இந்த வகையில் ஐடி தொழிலாளர்களுக்கு 6 மாதத்தில் 2 முறை சம்பள உயர்வு கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல தங்களது ஊழியர்களுக்கு 6 மாதத்துக்கு 2 முறை சம்பள உயர்வை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஐடி ஊழியர்களுக்கான சம்பள உயர்வை அந்நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. இந்த பேரிடர் காலத்தில் ஐடி நிறுவனங்கள் அதிகளவிலான ஆட்டோமேஷன் வர்த்தகத்தை செயல்படுத்தி வந்ததாலும், ஐடி பணியாளர்கள் வீடுகளில் இருந்தே வேலை செய்து வந்ததாலும் பல நிறுவங்களில் வர்த்தக பாதிப்பு ஏற்படவில்லை.

TN Job “FB  Group” Join Now

இதனால் ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் தொழிலாளர்களுக்கு அளிக்க வேண்டிய சம்பள உயர்வை பல தொழில்நுட்ப நிறுவனங்கள், அதன் ஊழியர்களுக்கு டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் வழங்கியது. அதே போல நடப்பு நிதியாண்டில் ஐடி துறையில் வர்த்தகம் அதிகளவில் இருப்பதால், வழக்கம் போல தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியார்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளது. மேலும் பல முன்னணி நிறுவனங்களில் உலக அளவில் வர்த்தகம் நடைபெற்று வருவதால், அதற்கேற்றவாறு திறன் மிகுந்த ஊழியர்களை பணியில் அமர்த்தவும் சம்பள உயர்வை அறிவித்து வருகிறது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் எதிரொலி – கொரோனா பாதிப்பு சரிவு!!

அதன் படி இந்தியாவில் 2 லட்சம் ஊழியர்களை கொண்டு இயங்கி வரும் அக்சென்சர் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு, போனஸ் ஆகியவற்றை டிசம்பர் மாதம் வழங்கியுள்ளது. தவிர இன்போசிஸ் நிறுவனமும் ஜனவரி மாதத்தில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அளித்த நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான சம்பள உயர்வு பணிகளும் தற்போது துவங்கியுள்ளது.

தமிழக பதிவுத்துறையில் கூடுதல் கட்டண வசூல் – வணிகவரித்துறை அமைச்சர் எச்சரிக்கை!!

டிசிஎஸ் நிறுவனமும் தனது ஊழியர்களுக்கு 6 மாத இடைவேளையில் 2 முறை சம்பள உயர்வை அளித்துள்ளது. மேலும் அந்நிறுவனத்தின் பல உயர் அதிகாரிகளுக்கு 6 முதல் 8 சதவீதம் சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தவிர ஹெச்சிஎல், டெக் மஹிந்திரா நிறுவனமும் தங்களது ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, போனஸ், பதவி உயர்வு என பல சலுகைகளை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!