பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி கல்வியை ஊக்குவிக்க 10 அடல் ஆய்வகங்கள் – இஸ்ரோ அறிவிப்பு!!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஸ்டெம் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் -STEM), விண்வெளி கல்வி மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் சம்பந்தமான புரிதல்களை வழங்குவதற்காக 100 அடல் ஆய்வகங்களை பயன்படுத்த இருப்பதாக காணொளி மூலமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி கல்வி:
இந்தியாவில் பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி கல்வி மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் சம்பந்தமான புதுமைகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ 10 அடல் ஆய்வகங்களை கொண்டுவர இருப்பதாக காணொளி மூலமாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்து உள்ளது.
ஏப்ரல் 15க்கு பிறகு பிளஸ் 2 பொதுத்தேர்வு – மாநில கல்வித்துறை திட்டம்!!
இந்த நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் டாக்டர் ராஜிவ்குமார் கூறியதாவது, “இந்தியாவின் பல்வேறு துறைகளும் அமைச்சகங்களும் தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றன. நிதி ஆயோக் மற்றும் இஸ்ரோ ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டமைப்பின் பிரதிபலனாக உள்ளது. நாட்டில் இளம் ஆராய்ச்சியாளர்களும், வீரர்களும் விண்வெளி குறித்த தகவல்களை அறியவும், அவர்கள் சமூகத்தில் முன்மாதியாக விளங்கவும் இந்த வாய்ப்பு அமைகிறது”, என்று கூறினார்.
தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 819 பேருக்கு பணிநியமன ஆணை!!
தொடர்ந்து பேசிய இஸ்ரோ தலைவர் டாக்டர் கே சிவன் கூறுகையில், “மற்ற கல்வி முறைகளோடு ஒப்பிடுகையில் இந்த புதிய முயற்சி, பள்ளி குழந்தைகளிடம் செய்முறை கல்வியை ஊக்குவிக்கும், பள்ளி நாட்களிலேயே இந்த திட்டம் குறித்த எண்ணத்தை ஊக்குவிக்க முதன்மையாக இருக்கும் என தெரிவித்தார். ஸ்ரீஹரிகோட்டாவில் செயற்கைகோள் ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ளது, அதனை பார்வையிட பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதனால் இளம் மாணவர்களின் தங்களது எண்ணங்களை செயலாக்கவும், புதுமையான திறன்களைக் கற்கவும் அடல் ஆய்வகங்கள் வழிவகை செய்கின்றன”. இவ்வாறு அவர் கூறினார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்