108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் & மருத்துவ உதவியாளர் பணி – 200 பேர் தேர்வு!!
ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு போன்றவை நேற்று நடைபெற்றது. அதில் 200 பேர் தேர்வு செய்யப்பட்டு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர்:
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர்கள் மற்றும் ஓட்டுனர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், பி.எஸ்.சி., நர்சிங், ஜி.என்.எம்., – ஏ.என்.எம்., – டி.பார்ம், டி.எம்.எல்.டி., பி.எஸ்சி., விலங்கியல், தாவரவியல், உயிரியல், வேதியியல், மைக்ரோபயாலஜி, தாவர உயிரியியல் போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 819 பேருக்கு பணிநியமன ஆணை!!
இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் வயது 19 முதல் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம், உடற்கூறியல் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
நீட் தேர்வு 2021 குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும்-மாணவர்கள் கோரிக்கை!!
இந்நிலையில் முதற்கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிகளுக்கான 200 காலியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி தற்போது 200 பணியிடங்களுக்கு 700 பேர் வரை விண்ணப்பித்தனர். அதில் 200 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட்டது. அவர்கள் சென்னைக்கு பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டு பின் பணி நியமனம் உள்ள இடங்களில் நியமிக்கப்பட உள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்