கோபியை வெளுத்து வாங்கும் ஈஸ்வரி, அதிர்ச்சியில் குடும்பம் – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அதிரடி திருப்பம்!

0
கோபியை வெளுத்து வாங்கும் ஈஸ்வரி, அதிர்ச்சியில் குடும்பம் - 'பாக்கியலட்சுமி' சீரியலில் அதிரடி திருப்பம்!
கோபியை வெளுத்து வாங்கும் ஈஸ்வரி, அதிர்ச்சியில் குடும்பம் - 'பாக்கியலட்சுமி' சீரியலில் அதிரடி திருப்பம்!
கோபியை வெளுத்து வாங்கும் ஈஸ்வரி, அதிர்ச்சியில் குடும்பம் – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அதிரடி திருப்பம்!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாக்கியா சொன்ன உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் கோபியின் அம்மா ஈஸ்வரி, விவாகரத்து பற்றிய விஷயம் தெரிந்ததும் கோபியை வெளுத்து வாங்குவது போல அடுத்த எபிசோடுகள் வெளியாக இருக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியல்

கடந்த சில எபிசோடுகளாக விறுவிறுப்புடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில், கோபியின் அத்தனை நாடகங்களையும் தனது குடும்பத்தாரின் முன்னால் புட்டு புட்டு வைக்கிறார் பாக்கியா. அந்த வகையில் இத்தனை நாட்களாக தன் மகன் உத்தமன் என்று எண்ணிக்கொண்டிருக்கும் அம்மா ஈஸ்வரி, கோபி குறித்து பாக்கியா சொல்லும் போது அவரால் நம்பமுடியவில்லை. அதிலும் குறிப்பாக ராதிகாவை பிழை சொல்லும் ஈஸ்வரி, என் மகன் அப்படி எல்லாம் விவாகரத்து வரைக்கும் போயிருக்க மாட்டான். நீ எதாவது சொல்லாத பாக்கியா என்று அவரை சத்தம் போடுகிறார்.

Exams Daily Mobile App Download

அப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே சரியாக கோர்ட்டில் இருந்து விவாகரத்து வழக்கிற்கான லெட்டர் ஒன்று வருகிறது. இதை தொடர்ந்து இன்று வெளியாக இருக்கும் எபிசோடில் லெட்டரை கையில் வாங்கியதும் கோபி செய்வதறியாது நிற்க அது விவகாரத்திற்காக தான் வந்த லெட்டர் என்று பாக்கியா சொல்கிறார். இதை கேட்டதும் அதிர்ச்சியில் உறையும் ஈஸ்வரி, உன்னை இப்படியா வளர்த்தேன். உன்னை பார்த்து பிள்ளைகள் வளர வேண்டும் என்று எண்ணினேன். இப்படி ஏமாற்றி விட்டாயே என்று சொல்லி விட்டு கோபிக்கு பளார் பளார் என்று நாலைந்து அறை விடுகிறார். இருந்தாலும் கோபி இந்த விஷயத்தில் தவறு செய்ததால் பிள்ளைகள் பாதிக்கப்பட்டதாக கூறும் ஈஸ்வரி, பாக்கியாவின் வாழ்க்கை கெட்டுப்போனதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

மறுபக்கத்தில், பாக்கியாவின் நிலைமையை எண்ணி அவருக்காக இனியா பரிதாபப்படுகிறார். இப்படி இருக்க இனிமேலும் இந்த வீட்டில் இருப்பதால் எந்தவொரு நன்மையும் கிடைக்க போவதில்லை என்று எண்ணிய பாக்கியா அதிரடியாக வீட்டை விட்டு வெளியேறுகிறார். இப்போது, பாக்கியாவின் முடிவை எதிர்பார்த்திராத மொத்த குடும்பமும் அவருக்கு பின்னாலே செல்கிறது. இனி பாக்கியா எங்கு செல்வார், எழில் அவருக்கு உறுதுணையாக வருவாரா என்ற எதிர்பார்ப்புடன் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் அடுத்தகட்ட கதைக்களம் நகர இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!