முதன் முறையாக தனது விவாகரத்து குறித்து மனம் திறந்த ‘பிக்பாஸ்’ இசைவாணி – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட கானா இசைப்பாடகி இசைவாணி தனது திருமணம் மற்றும் விவாகரத்து குறித்து முதன் முறையாக மனம் திறந்துள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.
பிக்பாஸ் இசைவாணி
கானா பாடல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வந்த பாடகி இசைவாணி விஜய் டிவியின் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் தனது பேச்சாலும், பாடலாலும் ரசிகர்களை கவர்ந்து வந்த இசைவாணி போகப்போக சில பிரச்சனைகளில் சிக்கி கொண்டார். அதுவும் குறிப்பாக ‘பிக்பாஸ்’ வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னதாக இசைவாணி மற்றும் தாமரைக்கு இடையே நடைபெற்ற சில சண்டைகள் பூதாகரமாக வெடித்திருந்தது.
விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” நக்ஷத்ராவிற்கு திருமணம் – நலங்கு நிகழ்ச்சி புகைப்படங்கள் வைரல்!
என்றாலும் இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில் ரசிகர்களின் ஏகபோக ஆதரவை பெற்றிருந்த இசைவாணி தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார். தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலமாக ரசிகர்களுடன் உரையாடி வரும் இவர் தனது திருமணம் மற்றும் விவாகரத்து குறித்து முதன் முறையாக மனம் திறந்துள்ளார். அதாவது கானா இசை பாடகியான இசைவாணி தன்னை போல கானா பாடல் கலைஞரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்திருக்கிறார்.
கண்ணனை அடித்து ரத்தம் சொட்ட கீழே தள்ளிய அடியாட்கள் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” அடுத்த எபிசோட்!
ஆனால் இந்த திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து செய்திருக்கிறார்கள். இப்போது திருமணம் குறித்து இசைவாணி பேசும் போது, ‘என்னுடைய வாழ்க்கையில் நடந்த அந்த தருணத்தை மறக்க விரும்புகிறேன். இந்த திருமணம் எனக்கு பெரிய வலியை கொடுத்தது. இதனால் என் வாழ்க்கையை முடித்து கொள்ளலாம் என்று கூட நினைத்திருக்கிறேன். ஆனால் இந்த கானா பாடல்கள் தான் எனது முடிவில் இருந்து என்னை மீண்டு வர செய்தது’ என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.