IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு – எளிய வழிமுறைகள் இதோ!

0
IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு - எளிய வழிமுறைகள் இதோ!
IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு - எளிய வழிமுறைகள் இதோ!
IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு – எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் நாம் ஆன்லைன் மூலம் எளிதாக ரயில் டிக்கெட்டுகளை புக் செய்வது குறித்த சில வழிமுறைகள் பற்றி இப்பதிவில் காண்போம்.

ரயில் டிக்கெட் புக்கிங்:

இந்தியாவில் பரவிய கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த ஏப்ரல், மே மாதங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கால் ரயில் பயணிகளின் வருகை குறைந்தது. இதன் விளைவாக பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் ரயில்வே துறை பெரும் சரிவை சந்தித்தது. இந்தியாவில் ரயில் சேவை என்பது அத்தியாவசிய சேவையில் ஒன்றாக இருப்பதால் கொரோனா சற்று குறைந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் மீண்டும் இயங்க தொடங்கி உள்ளது. கொரோனா முழுமையாக குறையாமல் உள்ளதால் கூட்டம் கூடுவதை தவிர்க்க முன்பதிவு அடிப்படையில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

டிசம்பர் 3ம் தேதி கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

இந்த நிலையில் அனைவரும் ஒரே நேரத்தில் ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முற்படுவதால் சில நேரங்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடிவதில்லை என்று ரயில் பயணிகள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த சிக்கலை எதிர்கொள்ள ஒரு சிறந்த வழியாக நீங்கள் ஏறும் மற்றும் இறங்கும் ரயில் நிலையத்தை மாற்ற வேண்டும், அதாவது நீங்கள் டிக்கெட் புக் செய்யும் போது ஏறவுள்ள ரயில் நிலையத்திற்கு பதிலாக அடுத்த நிலையத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த முறையில் ரயில் கட்டணம் சில நேரம் கூடுதலாகவும் ஆகும். போர்டிங் பாயிண்ட் தள்ளிச்சென்றால் டிக்கெட் கன்பார்ம் ஆகும்.

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு – CEO முக்கிய அறிவிப்பு!

அடுத்ததாக பயணத்தை பிரித்து புக் செய்யும் முறையில் டிக்கெட் கன்பார்ம் செய்யலாம். பயணத்தை ஒரே ரயிலுக்குள் 2 அல்லது 3 பாகங்களாக புக் செய்யலாம். இதில் ஸ்லீப்பர் கிளாஸில் ஆர்ஏசி அல்லது வெயிட்டிங் கிளாஸ் தான் கிடைக்கும் பட்சத்தில் வகுப்பை மாற்றினால் டிக்கெட் கிடைக்கும். அடுத்ததாக பயண விவரங்களை தேர்ந்தெடுத்தவுடன் பயணிகளின் விவரங்கள் ஏற்கனவே ஐஆர்சிடிசியில் சேர்த்து விட வேண்டும். இதனால் நேரம் மிச்சமாகும். அந்த நேரத்தில் டிக்கெட் முன்பதிவு கன்பார்ம் ஆகிவிடும். இவ்வாறு ஐஆர்சிடிசியில் கட்டணம் செலுத்த பல முறைகள் உள்ளது. விருப்பமானவற்றை தேர்தெடுத்து கட்டணம் செலுத்தலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!