ஐபிஎல் 2022: IPL தொடருக்காக 45,000 கோடி ரூபாய் மீடியா உரிமை ஒப்பந்தம் – பிசிசிஐ எதிர்பார்ப்பு!

0
ஐபிஎல் 2022: IPL தொடருக்காக 45,000 கோடி ரூபாய் மீடியா உரிமை ஒப்பந்தம் - பிசிசிஐ எதிர்பார்ப்பு!
ஐபிஎல் 2022: IPL தொடருக்காக 45,000 கோடி ரூபாய் மீடியா உரிமை ஒப்பந்தம் - பிசிசிஐ எதிர்பார்ப்பு!
ஐபிஎல் 2022: IPL தொடருக்காக 45,000 கோடி ரூபாய் மீடியா உரிமை ஒப்பந்தம் – பிசிசிஐ எதிர்பார்ப்பு!

IPL போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய இம்முறை அதிகமான ஊடகங்கள் போட்டி போடுகின்றன. 2018 ஆம் ஆண்டில் ஸ்டார் இந்தியா ஊடக உரிமையை எடுத்துக் கொண்டது. இந்த ஆண்டு IPL தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊடகம் ஒளிபரப்பு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை 40,000 முதல் 45,000 கோடி ரூபாய் நேரடி ஒளிபரப்புக்கு ஒப்பந்தம் செய்யலாம் என்று கூறப்படுகிறது.

பிசிசிஐ எதிர்பார்ப்பு:

இந்தியாவில் வருடந்தோறும் நடைபெறும் IPL கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி ஆம் தேதி தொடங்கவுள்ளது. இப்போட்டியில் வீரர்களை அணியில் எடுக்கும் ஏலம் இம்மாதம் பிப்ரவரி மாதம் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடக்க உள்ளதாக BCCI அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த ஆண்டு IPL போட்டிகள் துபாயில் நடைபெற்றது. அதேபோல் இந்த ஆண்டுக்கான IPL அணிகளின் ஏலமும் துபையில் நடந்தது. ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறவிருந்த IPL ஏலம் ஒரு மாதம் காலம் ஒத்திவைத்து இம்மாதம் மாதம் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு IPL போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய இம்முறை அதிகமான ஊடகங்கள் போட்டி போடுகின்றன.

மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – பிப்.15 வரை வீட்டில் இருந்தே வேலை நீட்டிப்பு!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2022) சீசன் 15 க்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஒரு பெரிய ஊடக உரிமை ஒப்பந்தத்தை எதிர்பார்க்கிறது. சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க், உலகளாவிய ஜாம்பவான்களான டிஸ்னி ஸ்டார் நெட்வொர்க், ரிலையன்ஸ்-வயாகாம் 18 மற்றும் அமேசான் போன்ற பல நெட்வொர்க்குகள் ஐபிஎல் மீடியா உரிமைகளைப் பெற களத்தில் உள்ளன. இந்திய கிரிக்கெட் வாரியம் 2023 மற்றும் 2027 க்கு இடைப்பட்ட நான்கு ஆண்டுகளுக்கு IPL இன் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமைகளை மார்ச் கடைசி வாரத்தில் மின்னணு ஏலத்தின் மூலம் விற்க உள்ளன.

1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மாநில அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

2018-2022 சுழற்சியில் ஸ்டார் இந்தியா IPL நேரடி ஒளிபரப்பு உரிமையை 16,347 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அப்போது பிசிசிஐ வசூலித்த தொகையை விட இம்முறை க மூன்று மடங்கு அதிகமாகும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஸ்டார் இந்தியாவிற்கு முன் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் ஊடக உரிமையை 8,200 கோடி ரூபாய்க்கு வைத்திருந்தது. 2018 ஆம் ஆண்டில் ஸ்டார் இந்தியா ஊடக உரிமையை எடுத்துக் கொண்டபோது இது கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்தது. பிசிசிஐ இப்போது 2023-27 சுழற்சியில் தொகை மூன்று மடங்காக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது. 40,000 முதல் 45,000 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!