IPL 2021 அப்டேட்ஸ் – துபாய் பறந்த ஸ்டீவ் ஸ்மித்! டெல்லி கேபிட்டல்ஸ் அசுர பலம்!
ஐபிஎல் போட்டிகளில் விளையாட துபாய் சென்றார் ஸ்டீவ் ஸ்மித். கொரோனா தனிமைப்படுத்துதலுக்கு பிறகு டெல்லி அணியுடன் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் போட்டிகள் 2021:
இந்தியாவில் வருடந்தோறும் நடைபெறும் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழா ஐபிஎல் போட்டிகள் ஆகும். கடந்த முறை கொரோனா தொற்றினால் ஒத்திவைக்கப்பட்ட இந்த போட்டிகள் பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ரசிகர்கள் இன்றி செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் நடைபெற்றது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பை வென்று அசத்தியது.
T20 World Cup – இந்திய அணி செப்.6ம் தேதி அறிவிப்பு! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
அதேபோல் 14வது சீசன் இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் திடீரென இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவி வந்ததாலும், வீரர்களுக்கு தொற்று ஏற்பட்டதனாலும், போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டது. தொற்றின் தாக்கம் தனித்து வருவதால் எஞ்சியுள்ள போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் ரசிகர்கள் இன்றி செப்டம்பர் மாதம் 19ம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. தொடக்க லீக் போட்டியில் சென்னை-மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
IND vs ENG 4வது டெஸ்ட் இன்று தொடக்கம் – உத்தேச 11 அணி & பிட்ச் ரிப்போர்ட்!
ஐபிஎல்லில் ஒரு அணியான டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் அங்கம் வகிப்பவர் ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித். அவர் தற்போது துபாயில் அங்கம் வகிக்கும் அவரது டெல்லி அணியுடன் இணைய நேற்று (செப்.1) துபாய் சென்றுள்ளார். 6 நாட்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் அணியுடன் பயிற்சியில் இணைவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீரர்களும் தத்தம் அணியுடன் இணைந்து வருவதனால் ஐபிஎல் போட்டிகள் துவங்க ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.