IPL 2021 – SRH vs CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 44 வது போட்டி இன்று நடந்து முடிந்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வென்றுள்ளது.
ஐபிஎல் தொடர்:
நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகளின் வரிசையில் இன்று மாலை 44 வது தொடர் நடத்தப்பட்டது. ஷார்ஜா மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியினரும் மோதிக் கொள்ளும் போட்டி என்பதால் ரசிகளிடத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங்கில் இறங்கினர். இதனால் ஐதராபாத் அணியின் வீரர்கள் முதலில் பேட்டிங்கில் களம் இறங்கினர்.
13 பிராந்திய மொழிகளில் பொதுத்துறை வங்கிகளின் எழுத்தர் தேர்வுகள் – நிதி அமைச்சகம் பரிந்துரை!
ஐதராபாத் அணி வீரர்கள் சென்னை அணியின் அபார பந்து வீச்சிற்கு ஈடுகொடுக்க முடியாமல் மிகவும் திணறினர். அதிகபட்சமாக ஐதராபாத் அணியின் சாஹா 44 ரன்களை எடுத்து தனது பந்தை தோனி கேட்ச் பிடித்த காரணத்தால் ஆட்டத்தை இழந்தார். மேலும், வில்லியம்சன் மற்றும் ரஷீத் கான் இருவரும் தலா 2 பவுண்டிரிகளை அடித்தனர். சாஹா 2 சிக்ஸர் அடித்து ஆட்டத்தில் ரன்களை குவித்தார். இதனால் ஐதராபாத் அணி 134 ரன்கள் 7 விக்கெட் இழப்பிற்கு எடுத்து ஆட்டத்தை முடித்தது.
குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
135 ரன்கள் என்ற எளிய இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய சென்னை அணி அதிரடியாக ஆட்டத்தை தொடங்கியது. ஆரம்ப வீரர்களான ருதுராஜ் மற்றும் ப்ளெஸி இருவரின் கூட்டணியும் அதிரடியாக ஆடியது. ருதுராஜ் 45 ரன்கள் மற்றும் ப்ளெஸி 41 ரன்கள் எடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். ராயுடு மற்றும் கேப்டன் தோனி இருவரும் ஆட்டமிழக்காமல் கடைசி 3 பந்தில் 2 ரன்கள் என்ற நிலையில் இருந்த போது தோனி 19.4 பந்தில் தனது பாணியிலான ஒரு சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்தார். இதனால் 19.4 ஓவர் முடிவில் சென்னை அணி 139 ரன்கள் 4 விக்கெட் இழப்பிற்கு எடுத்திருந்தது. எனவே, 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றியை பெற்றது.