இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Apprentices பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள 473 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் 07.02.2024 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
IOCL வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Apprentices பணிக்கென 473 பணியிடங்கள் IOCL நிறுவனத்தில் காலியாக உள்ளது. இதில் தமிழகத்திற்கு என மட்டும் 33 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- இந்த IOCL நிறுவன பணிகளுக்கு 12ம் வகுப்பு, Diploma, ITI, Bachelor’s Degree-யை அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
- 12.01.2024 அன்றைய தினத்தின் படி, இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 24 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Apprentices விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.
- இந்த மத்திய அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
IOCL விண்ணப்பிக்கும் முறை:
Apprentices பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் https://plapps.indianoil.in/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட இறுதி நாள் 01.02.2024 அன்றில் இருந்து 07.02.2024 அன்றாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.