Post Office: ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் அதிக ரிட்டன்ஸ் பெறலாம் – சூப்பரான சேமிப்பு திட்டம்!!
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் தற்போது ரூ.1 லட்சம் முதலீடு செய்து அதிக லாபம் தரும் திட்டத்தை குறித்த முழு விவரத்தை பார்ப்போம்.
சேமிப்பு திட்டம்:
தற்போது வங்கிகளை காட்டிலும் அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டத்தில் அதிக வட்டி கிடைக்கிறது. அதனால் தற்போது பெரும்பாலானோர் அஞ்சல் அலுவலகத்தின் சேமிப்பு திட்டத்தில் தங்களின் சேமிப்பு பணத்தை முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். தற்போது கால வைப்பு சேமிப்பு திட்டத்தில் (Time Deposit) கிடைக்கும் பலன்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
பழைய 10 ரூபாய் நோட்டு வைத்திருக்கிறீர்களா? அப்ப நீங்களும் பணக்காரர் ஆகலாம்! இதை மட்டும் செய்யுங்க!
Follow our Instagram for more Latest Updates
இந்த டெர்ம் டெபாசிட் திட்டத்தில் உங்களுக்கு கூடுதலாக வட்டி விகிதம், வரி சலுகை உள்ளிட்ட பல வகையான பலன்கள் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் கணக்கை தொடங்க குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இதற்கு உச்ச வரம்பு எதுவும் கிடையாது. மேலும் இதில் நீங்கள் 1 வருட டெபாசிட் திட்டம், 2 வருடம், 3 வருடம், 5 வருடம் என முதலீடு செய்வதற்கான காலத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
மேலும் நீங்கள் 1,2 மற்றும் 3 ஆண்டு கால சேமிப்பு திட்டத்தை தேர்வு செய்தால் உங்களுக்கு 5.5% வட்டி விகிதம் வரை கிடைக்கும். இதே போல் 5 ஆண்டு திட்டத்தில் 6.7% வட்டி விகிதம் வரை கிடைக்கிறது. இதுமட்டுமல்லாமல் நீங்கள் 6 மாதத்திற்கு பிறகு கணக்கை முடித்து கொள்வதற்கும் வசதிகள் உள்ளது. இப்போது நீங்கள் 5 ஆண்டுகால சேமிப்பு திட்டத்தின் கீழ் 1 லட்சம் முதலீடு செய்தால் உங்களுக்கு முதிர்வு காலத்தின் முடிவில் வட்டி கணக்கீடு செய்து ரூ.1,39,407 வரை கிடைக்கும்.