பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வாக்காளர் அடையாள அட்டை – தேர்தல் ஆணையம் அறிமுகம்!
இந்தியாவில் போலி வாக்காளர் அட்டைகள் உருவாவதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்காளர் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாக்காளர் அட்டை:
இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டை மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் போலி வாக்காளர் அடையாள அட்டை, இரட்டை வாக்கு பதிவு போன்றவற்றை தடுக்க வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
LIC பாலிசிதாரர்களுக்கு புது வசதி அறிமுகம் – வாட்ஸ் அப் மூலம் சேவைகள்!
கடந்த 2022ம் ஆண்டு மக்கள் ஆன்லைன் வாயிலாகவும், நேரடியாகவும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து தற்போது போலி வாக்காளர் அடையாள அட்டைகள் உருவாகுவதை தடுக்க கூடுதலாக 3 பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட புதிய வாக்காளர் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய வாக்காளர் அடையாள அட்டையில் ஹோலோகிராம்’ இனி அட்டைக்குள்ளையே ஒட்டப்படும். அடையாள அட்டை முன்புறம், வாக்காளரின் புகைப்படம் மற்றும் QR கோட் வசதிகளும் இடம்பெறும். விரைவில் நாடு முழுவதும் மக்களுக்கு ஒரே மாதிரியான வாக்காளர் அட்டை வழங்கப்படவுள்ளது.