தமிழக மாணவர்களுக்கான புதிய கல்வி திட்டங்கள் அறிமுகம் – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வித் திட்டத்தில் கூடிய விரைவில் டிஜிட்டல் முறையை புகுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
புதிய கல்வி திட்டம்:
தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக எந்தவித பாகுபாடும் இல்லாமல் கல்வி சென்றடைய வேண்டும் என்பதே பள்ளிக்கல்வித்துறையின் முக்கியமான நோக்கமாகும். மேலும், தமிழகத்தில் பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வித் திட்டத்தின்கீழ் கல்வி பெறாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு கற்பிக்கப்பட்டு வருகிறது. அதாவது, 15 வயதிற்கு மேல் கல்வியறிவு தொடங்க முடியாதவர்களுக்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த 1901 ஆம் ஆண்டில் எடுத்த கணக்கெடுப்பின்படி 100ல் 5 பேர் மட்டுமே எழுத்தறிவு பெற்றிருந்தனர்.
Exams Daily Mobile App Download
இதனையடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டில் 74%மக்கள் கல்வியறிவு பெற்றிருந்தனர். மேலும், தற்போது தமிழகத்தில் 80.33 சதவிகிதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். இதுமட்டுமல்லாமல், கடந்த ஆண்டில் மட்டுமே பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வித் திட்டத்தின் வாயிலாக 3.19 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதே போல இந்தாண்டும் 4.80 லட்சம் நபர்களுக்கு கல்வி பயிற்றுவிக்க வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வித் திட்டத்திற்காகவே ரூ.9.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிலிண்டர் மானியம் கிடைக்கவில்லையா? உடனே இதை செய்யுங்கள்!
இதனையடுத்து, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மட்டுமே ரூ.6.23 கோடி மதிப்பீட்டில் சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்த இருக்கின்றனர். மேலும், விருதுநகரில் மட்டுமே முதற் கட்டமாக 25,015 பேரும், இரண்டாம் கட்டமாக 45,792 பேரும் எழுத்தறிவை முடித்துவிட்டனர். இது மட்டுமல்லாமல் பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வித் திட்டத்தில் டிஜிட்டல் முறையை புகுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.