சிவில் நீதிபதி பதவிக்கான நேர்முகத் தேர்வு – சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!! 

0
சிவில் நீதிபதி பதவிக்கான நேர்முகத் தேர்வு - சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!! 
தமிழகத்தில் சிவில் நீதிபதி பதவிகளுக்கான நேர்முகத் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவினை பிறப்பித்துள்ளது.
நேர்முகத் தேர்வு:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு மாநில நீதித்துறை துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில், உரிமையியல் நீதிபதி பதவியில் காலியாக உள்ள 245 பணியிடங்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் 4 மற்றும் 5 ஆம் தேதியில் நடைபெற்றது. இந்நிலையில், உரிமையியல் நீதிபதி பதவிக்கான நேர்முகத் தேர்வு சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அலுவலகத்தில் இன்று வரை நடைபெறுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் சிவில் நீதிபதி பதவிகளுக்கான நேர்முகத் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் நேர்முகத் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்கிற தொடரப்பட்ட வழக்கிற்கு ஐகோர்ட் தலைமை பதிவாளர் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!