நாளை மதியம் வரை இணைய சேவை நிறுத்தம் – அரசு திடீர் உத்தரவு!
பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக இன்று மதியம் வரை இணைய சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த இணைய வேலை நிறுத்தம் நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இணைய சேவை நிறுத்தம்:
பஞ்சாப் மாநிலத்தில் வாரிஸ் பஞ்சாப் தே அமைப்பின் தலைவராக அம்ரித் பால் சிங் என்பவர் செயல்பட்டு வருகிறார். கடந்த மாதம் பஞ்சாப்பை சேர்ந்த பரிந்தர் சிங் என்பவரை கடத்தி தாக்கிய குற்றத்தில் அம்ரித் பால் சிங் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அதன்பின்னர், அம்ரித் பால் சிங்கை விடுவிக்க வேண்டும் என இவரது அமைப்பின் சில தலைவர்கள் வாள், துப்பாக்கி என கூர்மையான ஆயுதங்களுடன் காவல் நிலையத்திற்கு வந்து சண்டையிட்டுள்ளனர்.
SSC GD Constable 2022 – காலிப்பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியீடு!
இதன்பின்னர், அம்ரித் பால் சிங்கை காவலர்கள் சட்டப்படி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன்பின்னர், காவலர்கள் அம்ரித் பால் சிங்கிற்கு தொடர்புடைய சிலரையும் கைது செய்ததாக கூறப்படுகிறது. மேலும், போலீசார் பிடியில் இருந்து அம்ரித் பால் சிங் தப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், பஞ்சாப் மாநிலம் முழுக்க பதற்றமான சூழல் நிலவியது. மேலும், சமூக வலைதள பக்கங்களில் போலியான தகவல் பரவ கூடாது என்பதற்காகவும் இன்று மதியம் வரை இணைய சேவை நிறுத்தப்பட்டது. தற்போது இந்த அறிவிப்பை நீட்டித்து நாளை மதியம் வரை இணைய சேவையை நிறுத்தப்போவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.