சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் உயர்வு? முக்கிய அறிவிப்பு!
கடந்த பல மாதங்களாக வட்டி விகிதங்களில் உயர்வை காணாத சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வரும் ஜூலை முதல் செப்டம்பர் வரையுள்ள காலாண்டில் வட்டி உயர்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
வட்டி விகிதங்கள்
சமீப காலமாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு பொது மற்றும் தனியார் துறையை சேர்ந்த வங்கிகள் FD உள்ளிட்ட பல்வேறு கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. இந்த நடவடிக்கையானது ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிக்கப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் வங்கிகளில் அதிகரித்து வரும் வட்டி விகிதங்களுக்கு மத்தியில் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் வரும் நாட்களில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Exams Daily Mobile App Download
பொதுவாக சிறு சேமிப்பு திட்டங்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் மத்திய அரசாங்கம் வட்டியை நிர்ணயிக்கிறது. ஆனால், கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களாக பல மாதங்களாக சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் மாற்றப்படாமல் இருந்தது. இதனால் மத்திய அரசின் 10 ஆண்டு பத்திரங்களின் லாபம் 7.46% ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ஜூலை முதல் செப்டம்பர் காலத்துக்கான வட்டி விகிதம் விரைவில் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
TNUSRB PC பணிக்கு விண்ணப்பிக்க உள்ளோருக்கு உதவி மையம் அறிமுகம் – தகவல் வெளியீடு!
இப்போது சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டால், அவை தபால் அலுவலக சேமிப்பு கணக்கு (SB), தேசிய சேமிப்பு நிரந்தர வைப்பு நிதி (FD), தபால் அலுவலக தொடர் வைப்பு நிதி (RD), மாத வருமானத் திட்டம் (MIS), சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் (SCSS), பொது வருங்கால வைப்பு நிதி (PPF), செல்வமகள் சேமிப்பு திட்டம் (SSA), தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC) மற்றும் கிசான் விகாஸ் பத்திரம் (KVP) ஆகிய சேமிப்பு கணக்குகளுக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.