முன்னதாக மின்கட்டணம் செலுத்துவோருக்கு வட்டி – புதிய நிதியாண்டில் அமல்!!
தமிழ்நாடு மின்சார வாரியம்:
தமிழக மின்சாரத்துறை அவ்வப்போது மக்களுக்கு சில சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்றின் தாக்கத்தினால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சாதாரண மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. பலர் தங்களின் வேலைவாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர். ஊரடங்கின் போது தமிழக மக்களின் நலன் கருதி மின்சார வாரியம் மக்களுக்கு மின்கட்டணம் செலுத்துவதற்கான காலஅவகாசத்தை நீட்டித்து உதவியது.
NMMS கல்வி உதவித்தொகை தேர்வு நுழைவுச்சீட்டு – அரசு தேர்வுத்துறை வெளியீடு!!
மின்விநியோகம்:
இந்நிலையில் மின்கட்டணத்தை மக்கள் முன்னதாகவே செலுத்துவதற்கு ஊக்குவிக்கும் வகையில் தமிழக ஒழுங்குமுறை ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மின்கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தும் மக்களுக்கு வட்டி பணம் வழங்கப்பட உள்ளது.
பொதுவாக 20 நாட்களுக்கு மேல் மின்கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு மின்விநியோகம் துண்டிக்கப்படும்.
வட்டிப்பணம்:
மின்கட்டணம் செலுத்த வேண்டிய நாட்களில் செல்லும் சூழல் வந்தால் மின்விநியோகம் துண்டிக்கப்படுவதை தவிர்க்க தங்களின் மின்கட்டணத்தை உத்தேசமாக யூகித்து முன்கூட்டியே கட்டலாம். அப்படி, மின்கட்டணத்தை முன்கூட்டியே செலுத்துபவர்களுக்கு ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் வட்டியை மின்வாரியம் மக்களுக்கு வழங்குகிறது. நடப்பு ஆண்டில் இந்த வட்டி பணம் 3.25% ஆக இருந்த நிலையில், வரப்போகும் புதிய நிதியாண்டில் இருந்து 2.70% ஆக வழங்க ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்