தமிழகத்தில் ஆசிரியர் காலிபணியிடங்களை நிரப்பும் பணி தீவிரம் – முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும்பணி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக ஆசிரியர்களை நியமிக்க காலதாமதம் ஆகும் என்பதால் தற்போதைக்கு தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்கவுள்ளனர்.
ஆசிரியர் காலிபணியிடம்:
மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வுகளையும், பகுத்தறிவுகளையும் புகுத்த வேண்டும் என்பதற்காக மக்களுக்கு சில அறிவுசார்ந்த புத்தகங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ் பண்பாட்டு பேரமைப்பு சார்பில் 6ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா அரியலூர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும், இந்த புத்தகத் திருவிழாவினை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் துவங்கி வைத்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
மேலும், இந்த புத்தகத்திருவிழா இன்றிலிருந்து ஜுலை 04 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த புத்தக திருவிழாவில் ஏராளமான அரசு அலுவலர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர். மேலும், புத்தக திருவிழாவில் லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகள் அடங்கிய புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசிய போது பள்ளி வளர்ச்சியில் தற்போது புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து அந்தந்தப் பகுதியை சார்ந்த ஊராட்சி பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல் – அமைச்சர் விளக்கம்!
மேலும், அரசு பள்ளிகளில் உள்ள 13 ஆயிரத்து 300 ஆசிரியர் காலிபணியிடங்களை நிரப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக ஆசிரியர்களை நியமனம் செய்ய கால தாமதம் ஆகும் என்பதால் தற்காலிகமாக ஆசிரியர்களை கொண்டு பணியிடங்களை நிரப்பும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார். மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக தான் தற்காலிகமாக ஆயிரியர்களை நியமிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். மேலும், இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் பணியிடங்களுக்குமான தற்காலிக ஆசிரியர்களை நிரப்பும் பணி வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் நிரப்பப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.