தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல் – அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் தாக்கம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தொற்று பரவல் அதிகரித்து வந்தால் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா என்பது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக கூடுதல் தகவல்களை பற்றி பார்ப்போம்.
கொரோனா கட்டுப்பாடுகள்
நாடு முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் பல்வேறு மாநிலங்களில் தொற்று பரவலை கட்டுப்படுத்த கொரோனா கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது பல்வேறு மாநிலங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதில் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் கொரோனாவின் தாக்கம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.
Exams Daily Mobile App Download
அதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதனால் கொரோனா அதிகரிக்கும் பட்சத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு தற்போது ஆயிரத்தை தாண்டி பதிவாகிறது. அத்துடன் காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி, சளி உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டால் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் பள்ளிகள் ஜூலை 1 முதல் துவக்கம் – அரசு அறிவிப்பு!
இல்லையெனில் அரசின் கொரோனா கண்காணிப்பு மையத்தில் தனிமைப்படுத்தி கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளதா என்று பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். கொரோனா அதிகரிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்த வேண்டிய நிலை தற்போது இல்லை. ஆனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.