கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் பள்ளிகள் ஜூலை 1 முதல் துவக்கம் – அரசு அறிவிப்பு!
தேசிய தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வரும் சூழலில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் அனைத்தும் ஜூலை 1 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
இந்தியா முழுவதும் கடந்த ஒரு சில வாரங்களாக அதிகரித்து வரும் கொரோனா பரவல் பாதிப்புகளுக்கு மத்தியில் டெல்லியில் உள்ள பள்ளிகள் ஜூலை 1 முதல் மீண்டும் திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் டெல்லி என்.சி.ஆர் பகுதியில் கொரோனா புதிய பாதிப்புகள் அதிகரித்து வருவதால், இது தேசிய தலைநகரை தாக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கொரோனா வைரஸின் 4வது அலை குறித்த அச்சத்திற்கு மத்தியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால் பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது
Exams Daily Mobile App Download
இதற்கிடையில் தேசிய தலைநகரில் கொரோனா வைரஸ் வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்த பள்ளி நிர்வாகங்கள் திட்டமிட்டுள்ளன. அந்த வகையில் பள்ளி வளாகத்தில் இருக்கும்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசங்களை அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட நோய்த்தடுப்பு வழிகாட்டுதல்களை கடைபிடிப்பதன் மூலம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை – சிறப்பு முகாம் குறித்த அறிவிப்பு!
இது தவிர, பல பள்ளிகள் சிறப்பு சுகாதார மையத்தை அமைக்கவும் திட்டமிட்டுள்ளன. அங்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் மாணவர்களுக்கு முதன்மை சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த சில வாரங்களில், டெல்லி மற்றும் அதன் பிராந்தியத்தில் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளன. குறிப்பாக கடந்த ஜூன் 21 அன்று டெல்லியில் 1060 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் சுகாதாரத்துறை பகிர்ந்துள்ள தரவுகளின்படி, கொரோனா வழக்கு நேர்மறை விகிதமும் டெல்லியில் 10.09 சதவீதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.