தமிழகத்தில் கறவை மாடுகளுக்கு காப்பீட்டு திட்டம் – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களின் நலனை கருதியும், பால் உற்பத்தியை பெருக்கவும் கறவை மாடுகளுக்கு காப்பீட்டு திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அறிவிப்பு:
தமிழகத்தில் சேலம் அருகே தலைவாய்ப்பட்டியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பால் பதப்படுத்தப்படும் பகுதி, பால் பாக்கெட்டுகள் தயாரிக்கும் இடம், , உப பொருட்கள் தயாரிக்கும் பகுதி, ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யும் என அனைத்து இடங்களிலும் நேரில் ஆய்வு செய்தார்.
சென்னையில் நாளை (மே 19) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – வேலைதேடுவோர் கவனத்திற்கு!
அப்போது ஆவின் நிர்வாக அதிகாரிகள், உணவு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள், கால்நடை பராமரிப்பு துறை ஆகியோருடன் ஆய்வு கூட்டம் நடத்திய பின் பால் உற்பத்தியை பெருக்கவும், ஆவின் நிர்வாகத்தை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முடிவு செய்தார். அதனால் பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு கறவை மாடுகளுக்கு காப்பீடு திட்டம் கொண்டு வர முடிவு செய்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download