கோபி செய்த காரியத்தை நினைத்து அசிங்கப்படும் இனியா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி பற்றிய உண்மை எல்லாம் தெரிந்து இனியாவால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்நிலையில் ஏற்கனவே கோபி இனியாவிடம் அம்மாவை பிரிந்தால் யாருடன் இருப்பாய் என கேட்டது நியாபகம் வருகிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் கதைக்களம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து வருகிறது. ஒரு பக்கம் பாக்கியாவிற்கு எல்லா உண்மையும் தெரிய வர குடும்பத்திடம் சொல்லி கோபியிடம் கேள்வி கேட்கிறார். ஆனால் கோபி அதற்கு பதில் சொல்லாமல் இருக்கிறார். பாக்கியாவை ஏமாற்றி கோபி விவாகரத்து வரை சென்றது எல்லாம் பாக்கியாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் பாக்கியா வீட்டை விட்டு செல்ல முடிவு செய்கிறார். இதற்கிடையே எழில் பாக்கியாவிற்கு ஆதரவாக வெளியே சென்றுவிடுகிறார்.
நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை – அமைச்சர் தலைமையில் குழு! முதல்வர் அறிக்கை!
மறுபக்கம் ஊரை விட்டு செல்ல ராதிகா திட்டமிட ஆனால் அவருடைய அம்மாவும் அண்ணனும் சேர்ந்து ராதிகாவின் மனதை மாற்றுகின்றனர். அதனால் என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் ராதிகா குழப்பத்தில் இருக்கிறார். பாக்கியா வீட்டை விட்டு சென்றதால் ஈஸ்வரி, தாத்தா, இனியா, செழியன், ஜெனி என அனைவரும் வருத்தத்தில் இருக்கின்றனர். அம்மா இல்லாமல் நான் இருக்கமாட்டேன் என இனியா அழுது கொண்டே இருக்கிறாள்.
Exams Daily Mobile App Download
அவள் கோபியிடம் பேச செல்ல உங்களை என் நண்பர்களிடம் எவ்வளவு பெருமையாக பேசினேன் ஆனால் நீங்க இப்படி மோசமாக நடந்து கொண்டீர்கள் அம்மா பாவம் என சொல்லி வருத்தப்படுகிறார். எங்களை பற்றி நீங்க நினைக்கவில்லை என சொல்ல, என்னை கூட உங்களுக்கு பிடிக்கவில்லை என இனியா சொல்கிறார் . ஆனால் கோபி நான் இந்த வீட்டை விட்டு சென்றாலும் உன்னை உடன் அழைத்து கொண்டு தான் செல்வேன் என சொல்ல, அப்போது ஏற்கனவே கோபி உன் அம்மாவை பிரிந்தால் யாருடன் இருப்பாய் என கேட்டது நியாபகம் வருகிறது. அப்போ அந்த அர்த்தத்தில் தான் கேட்டீர்களா என இனியா தனது அப்பாவை நினைத்து அசிங்கப்படுகிறார். இதெல்லாம் இன்றைய எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது.