சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் கவனத்திற்கு – மாநகராட்சி ஆணையர் உத்தரவு!
சென்னை மாநகரத்தில் கொரோனா பேரலை தொற்றை கட்டுப்படுத்தும் விதத்தில், நோய் தொற்றால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சில கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தொற்று
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனா முதலாம் மற்றும் 2ம் அலை மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தது. அந்த வகையில் சென்னையில் மட்டும் இதுவரை 5,49,270 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர 8,467 பேர் மரணமடைந்துள்ளனர். இருந்தாலும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சுமார் 5,38,745 பேர் குணமாகி உள்ளனர். மேலும் தற்போது வரை கொரோனவால் பாதிக்கப்பட்டு 2,058 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் போலீசாருக்கு வார விடுமுறை அமல் – கொண்டாடும் காவலர்கள்!
குறிப்பாக சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 186 பேருக்கு புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் அதிகபட்சமாக 238 பேர் அண்ணாநகரை சேர்ந்த மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில் சென்னை மாநகரில் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஒரு தெருவில் 3க்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டால் அந்த தெரு கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு வருவதையடுத்து, தற்போது சுமார் 10 இடங்கள் அடைக்கப்பட்டுள்ளது.
அதிலும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களால் ஒரு வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்படுகிறது என அவ்வப்போது பிரச்சனைகளும் எழுந்து வருகிறது. அதனால் சென்னை மாநகர் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புகளை முழுமையாக கட்டுப்படுத்தும் விதத்தில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆலோசனை மேற்கொண்டார். இதை தொடர்ந்து அவர் கூறுகையில், ‘சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க கூடாது.
செப்.30 தேதி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு – கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு!
தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் மருத்துவமனைக்கு சென்று 14 நாள்கள் வரை சிகிச்சை பெற வேண்டும். வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க விரும்புபவர்கள் உரிய அலுவலர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். அந்த அலுவலர்கள், நோயாளியின் வீட்டை முழுமையாக ஆய்வு செய்து, அங்கு தனி அறை, கழிப்பறை வசதிகள் இருந்தால் மட்டுமே அதற்கான அனுமதியை வழங்குவார்கள். மேலும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர் வீட்டை விட்டு வெளியே நடமாடுவது தெரிந்தால் வீட்டுத் தனிமை ரத்து செய்யப்படும்’ என உத்தரவிட்டுள்ளார்.