IND vs ENG 3வது டெஸ்ட் – பயிற்சியை துவங்கிய இந்திய அணி! வெற்றி தொடருமா?
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 25ம் தேதி ஹெடிங்லி மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்திய அணி வீரர்கள் இதற்கான பயிற்சியை தொடங்கி உள்ளனர். இங்கிலாந்து அணி முதல் வெற்றியை பதிவு செய்ய முனைப்பு காட்டும் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
3வது டெஸ்ட் போட்டி:
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாட்டிங்ஹாமில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஷமி, பும்ராஹ் மற்றும் சிராஜ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது. இதன் மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை – புதிய வழிமுறைகள் வெளியீடு!
இந்நிலையில் 3வது போட்டி ஹெடிங்லி மைதானத்தில் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்காக கேப்டன் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி லீட்ஸ் வந்து சேர்ந்துள்ளது. தற்போது ஹெடிங்லி ஸ்டேடியத்தில் பயிற்சியை தொடங்கியுள்ளனர். இரு அணி வீரர்களுக்கு இடையில் உரசல்கள், கள வாக்குவாதங்கள் என போட்டி மிகுந்த பரபரப்புடன் காணப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 3வது டெஸ்ட் போட்டியில் தொடர் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்திய அணியில் ஜடேஜாவிற்கு பதிலாக அஷ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து அணி முதல்முறையாக நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் மாலனை டெஸ்ட் போட்டிகளில் களமிறக்க உள்ளது. மேலும் மீதமுள்ள போட்டிகளில் இருந்து டோம் சிப்லி மற்றும் சேக் கிராலி ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளனர்.