தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை – புதிய வழிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி வழங்கப்பட்ட நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு வேதியியல் பாட மதிப்பெண் கட்டாயம் இல்லை என உயர்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.
பொறியியல் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் குறிப்பிடால் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11 ஆம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிடப்பட்டது.
தமிழக அரசு மருத்துவமனைகளில் 24 மணிநேரமும் கொரோனா தடுப்பூசி – இன்று முதல் அமல்!
மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10, 11 ஆம் வகுப்பு மதிப்பெண் மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு முடிவு அடிப்படையில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு கடந்த ஜூலை 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வழங்க கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் எடுத்த மதிப்பெண் கட்டாயம் ஆகும். இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளையுடன் விண்ணப்ப பதிவு நிறைவடைய உள்ள நிலையில், புதிய வழிகாட்டுதல்களை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதில் வழக்கமாக பொறியியல் படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல் பாடங்களுடன் வேதியியல் பாட மதிப்பெண் கட்டாயம் என இருந்த நிலையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு வேதியியல் பாட மதிப்பெண் கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை 10 ஆம் வகுப்பு மதிப்பெண்ணுடன், 12 ஆம் வகுப்பு கணிதம், இயற்பியல் மற்றும் விருப்ப பாடத்தின் மதிப்பெண், பிறந்த தேதி, ரேண்டம் எண் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை வழங்கப்பட வேண்டும் என உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.