கோவை மாவட்டத்தில் கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – ஆட்சியர் அறிவிப்பு!
கோவை மாவட்டத்தில் கொரோனா அதிகம் பரவும் காரணத்தால் கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் இயங்க மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
கூடுதல் கட்டுப்பாடுகள்:
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து வருகிறது. அதனால் மீண்டும் தடுப்பு பணிகள் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. ஈரோடு, தஞ்சை, திருப்பூர், சேலம், கோவை ஆகிய மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு டெல்டா வகை வைரஸ் பரவுகிறது. இது பொதுமக்களிடையே அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்று அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை – புதிய வழிமுறைகள் வெளியீடு!
மேலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தொற்று பரவல் எண்ணிக்கையை பொறுத்து தங்களுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் தொடர்ந்து தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. மேலும் இம்மாவட்டம் கேரள எல்லைப் பகுதியில் அமைத்துள்ளது. கேரளாவில் நாள் ஒன்றுக்கு 10,000 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தடுப்பு நடவடிக்கையாக கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மால்கள், பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியங்கள் போன்றவற்றிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை விமானம் மற்றும் ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு 72 மணி நேரத்திற்குள் பரிசோதனை செய்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ்கள் கட்டாயம் என்று மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.