பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – ரயில்வேயின் அதிரடி முடிவு.. இனி இந்த வகுப்பில் பயணம் செய்ய முடியாது!
இந்திய ரயிலில் நீண்ட தூர பயணங்களின் போது மக்கள் வசதியாக பயணம் செய்ய 3 அடுக்கு ஏசி பெட்டிகளை தேர்ந்தெடுக்கின்றனர். இதில் ஒரு நன்மை என்னவென்றால் கட்டணமும் மிக குறைவு. இந்த நிலையில் ரயில்வே அமைச்சகம் முக்கிய முடிவை எடுத்துள்ளது.
3 அடுக்கு ஏசி பெட்டிகள்:
இந்தியாவில் மக்கள் மிக குறைந்த கட்டணத்தில் நீண்ட தூரம் பயணம் செய்ய ரயில்களை தேர்ந்தெடுக்கின்றனர். ஏனெனில் ரயிலில் உணவு, படுக்கை வசதி, கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் உள்ளது. அதனால் நாளுக்கு நாள் ரயிலில் பயண செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கேற்றது போல ரயில்வே நிர்வாகமும் பயணிகளுக்கான புதிய திட்டங்களையும் சலுகைகளையும் வழங்கி வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில் கடந்த வருடம் ஏசி 3- இ பொருளாதார பெட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் படுக்கை வசதியுடன் 83 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வகுப்பில் பயணிப்பவர்களுக்கு ரயில் கட்டணங்கள் 6 முதல் 8 சதவீதம் வரையிலும் குறைவாக வசூலிக்கப்படும்.அதிக பயணிகள் இந்த ஏசி 3- இ பொருளாதார பெட்டிகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்து வரும் நிலையில் தற்போது ஏசி 3- இ பொருளாதார வகுப்பை நீக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தமிழக கூட்டுறவு துறையில் 6,500 பணியிடங்கள் – அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
அதற்கு பதிலாக ஏசி 3- இ பொருளாதார வகுப்பை ஏசி 3 அடுக்கு வகுப்புகளுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வகுப்புகள் அடுத்த 4 மாதங்களில் இணைக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 463 ரயில்களில் ஏசி 3- இ பெட்டிகளும், 11,277 ரயில்களில் ஏசி 3-ம் வகுப்பு பெட்டிகள் இயக்கப்பட்டு வருகிறது.