தமிழக கூட்டுறவு துறையில் 6,500 பணியிடங்கள் – அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
தமிழக அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் அவ்வப்போது அரசு வேலை வாய்ப்பு மற்றும் அதன் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் தனது துறையின் கீழ் உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பணி நியமனம்:
தமிழகத்தில் 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் மற்றும் அதற்கான தேர்வு போன்ற தகவல் வெளியாகி வருகிறது. கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த 19ம் தேதி மக்கள் அதிகம் எதிர்பார்த்த குரூப் 1 தேர்வு சிறப்பாக நடைபெற்றது. சுமார் 3.22 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர்.
Follow our Instagram for more Latest Updates
அதனை தொடர்ந்து வரும் 27ம் தேதி காவல் துறை பணியிடங்களுக்கான TNUSRB PC தேர்வு நடைபெறவுள்ளது. மற்ற துறைகளை தொடர்ந்து கூட்டுறவு துறை பணியிடங்கள் குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் வெளியிட்டுள்ளார். திருப்பத்தூரில் கூட்டுறவு துறை சார்பில் 69வது கூட்டுறவு வார விழாவில் பங்கேற்ற அவர் வரும் 2023ம் ஆண்டில் 6500 புதிய ஊழியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.
TNPSC CESSE இறுதி விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!
Exams Daily Mobile App Download
மேலும் இந்தியாவில் பொது விநியோக திட்டத்தில் சிறப்பாக செயல்படும் மாநிலம் தமிழகம் தான் என்றும் கூறியுள்ளார். அத்துடன் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.